Sunday, March 29, 2026

அதிரை நகர்மன்ற தலைவியை தேர்வு செய்வதில் கடும் இழுபறி! இருதரப்பும் தேர்தல் களம்காண வாய்ப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நகராட்சி மன்றத்தில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்த போதிலும் உட்கட்சிபூசல் காரணமாக நகர்மன்ற தலைவியை தேர்வு செய்வதில் கடும் இழுபறி நிலவுகிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் 40 ஆண்டுகால சாம்ராஜியத்தை அதிரையில் வீழ்த்தி 5 ஆண்டுகாலம் வனவாசம்போல் எந்த ஒரு அதிகாரமுமின்றி நகரமன்ற தலைவராக இருந்த தனக்கு தான் தலைவர் பதவியை தர வேண்டும் என ஒரு தரப்பு சமூக வலைதளங்களில் கூறி வருகிறது.

அதேசமயம் அனைத்து தரப்பு மக்களையும் அனுசரித்து சண்டை சச்சரவுகளின்றி எல்லோருக்குமான நிர்வாகத்தை வழங்கி வந்த தங்களுக்கு தான் நகர தலைவர் பதவியை தர வேண்டும் என மற்றோரு தரப்பும் கூறுகிறது.

இத்தகைய சூழலில் தனிப்பெரும்பாண்மை கிடைத்தபோதிலும் அதிரை நகர்மன்ற தலைவியை தேர்வு செய்வதில் திமுகவில் கடும் இழுபறி நிலவுகிறது. அதேபோல் தலைமை டிக் செய்யும் ஒருவரை எதிர்த்து மற்றோருவர் களம் காணவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் நகர்மன்ற தலைவர் தேர்தலை பொறுத்தவரை கட்சியின் கொள்கைக்கு எதிராக வாக்களித்தாலும் வார்டு உறுப்பினர் பதவி பறிபோகாது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன்...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில்...

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை...
spot_imgspot_imgspot_imgspot_img