அதிரை நகராட்சி மன்றத்தின் புதிய அலுவலகம் கட்டுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நகராட்சி மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், எம்.எம்.எஸ்.அப்துல் கரீம் ஆகியோர் தலைமையில் ரிச்வே கார்டனில் நடைபெற்றது. இதில் அனைத்து முகல்லாஹ் கூட்டமைப்பு, அதிமுக, SDPI, மமக உள்ளிட்டவற்றில் தலைவர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை முன் வைத்தனர். அப்போது நகராட்சி அலுவலகத்திற்காக தனது இடத்தை விற்பனை செய்ய பி.எம்.கே. தாஜுதீன் முன்வந்தார். இதனையடுத்து சேது சாலையில் உள்ள அவரது இடத்தில் (ஈ.சி.ஆர் ரயில்வே கேட் அருகே) புதிய நகராட்சி மன்ற அலுவலகத்தை கட்ட கூட்டத்தில் முடிவு செய்தனர். இந்த கட்டடம் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Big breaking: ரூ.5 கோடி செலவில் சேது சாலையில் அமைகிறது அதிரை நகராட்சி மன்ற புதிய அலுவலகம்!
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





