Monday, December 1, 2025

பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளருக்கு எதிராக புகார்! நீதி கேட்கும் அதிரையர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயத்தில் வசித்து வரும் தங்கவேல், தற்போது பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். இவரிடம் ரியல் ஸ்டேட் தொழிலுக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதிரையை சார்ந்த முகம்மது அப்துல் காதர் ஒரு கோடியே 63 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார். இதனை பெற்றுக்கொண்ட தங்கவேல் பல ஆண்டுகளாகியும் முதலீட்டையும் லாப தொகையையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த முகம்மது அப்துல் காதர், மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் தங்கவேலின் மோசடி குறித்து புகார் அளித்திருக்கிறார்.

இதனையடுத்து இந்த புகார் குறித்து வல்லம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிருந்தா நடத்திய விசாரணையில் பண மோசடியில் தங்கவேல் ஈடுபட்டது தெரியவருவதால் மத்திய குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்ய ஆவண செய்யுமாறு தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பரிந்துரை செய்தார். ஆனாலும் இதுவரை இந்த விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனிடையே தஞ்சாவூர் தாலுகா புதுபட்டினத்தில் உள்ள 47 ஏக்கர் விவசாய நிலத்தை தங்கவேல் ஆக்கிரமிப்பு செய்தது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அப்துல் காதர் உட்பட விவசாயிகள் புகார் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த தங்கவேல், பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முகம்மது அப்துல் காதருக்கு எதிராக புகார் அளித்திருக்கிறார். அதில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி பட்டுக்கோட்டை பைபாஸ் அருகில் தன்னை அப்துல் காதர் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தங்கவேல் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தான் அன்றைய தினம் பட்டுக்கோட்டை செல்லவே இல்லை என மறுக்கும் அப்துல் காதர், பொய் புகாரில் தன் மீது வழக்குபதிவு செய்ய பட்டுக்கோட்டை காவல்துறை முனைப்பு காட்டியதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், தன்னை மிரட்டிய காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி, உதவி ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் பட்டுக்கோட்டை உட்கோட்டாட்சியர் முன்னிலையில் குற்றவியல் நடைமுறை சட்டம் 107வது பிரிவின் கீழ் வலுக்கட்டாயமாக பாண்ட் எழுதி வாங்கி இருப்பதாக அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிபாளரிடம் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் கம்பம் சாதிக் தலைமையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தங்கவேலுவுக்கு ஆதரவாக செயல்படும் காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி, உதவி ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அப்துல் காதரின் குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img