Sunday, February 1, 2026

அதிரையில் ரகசியமாக வைக்கப்படும் தீர்மானங்கள்! நகர்மன்றத்தில் என்ன நடக்கிறது?

spot_imgspot_imgspot_imgspot_img

27 வார்டுகளை உள்ளடக்கிய அதிரை நகராட்சியின் புதிய நகர்மன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமைந்தது. இந்நிலையில், தற்போது நகர்மன்ற கூட்டங்களில் என்ன நடக்கிறது என்பதனை வெகுஜன மக்களின் பார்வைக்கு தெரிவிப்பது இல்லை ? மக்களின் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள் என்னதான் செய்து கொண்டு இருக்கிறார்கள்? என்கிற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக நகர்மன்ற கூட்ட தீர்மானங்களை https://www.tnurbantree.tn.gov.in/adirampattinam/council-resolution-2/ என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முறையாக அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் அதிரை நகர் மன்ற தீர்மானங்களில் சிலவற்றை அதில் காண கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான கூட்ட தீர்மானங்கள் மட்டுமே இந்த அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் நகர்மன்ற கூட்டங்கள் நடைபெற்றதா? என்கிற கேள்வி மக்கள் மத்தியில் நிலவுகிறது. அவ்வாறு கூட்டங்கள் நடைபெற்று இருக்கும் பட்சத்தில் மூன்று மாதங்களாக தீர்மான விபரங்கள் ஏன் அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

நகராட்சி எல்லையில் நடைபெற கூடிய பல லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் நகர்மன்ற கூட்ட தீர்மானங்களில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img