Wednesday, March 18, 2026

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க நாளையே கடைசி நாள்… இனி அவகாசம் நீட்டிக்கப்படாது என தகவல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு (பிப்ரவரி 15) நாளை கடைசி நாளாகும். ஏற்கனவே கால அவகாசம் அளிக்கப்பட்ட சூழலில் இனிமேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று மின் வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது.

இதற்காக நவம்பர் 28ஆம் தேதி முதல் இணைக்க பணிகள் தொடங்கிய நிலையில் தொடர்ந்து அவகாசம் வழங்கப்பட்டு பிப்ரவரி 15 ஆம் நாள் வரை இணைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் சிலர் இன்னும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்காததால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கத் தமிழ்நாடு மின்சார வாரியம் அவகாசம் வழங்கி நிலையில் தற்போது கடைசி நாள் நெருங்கிவிட்டது.

ஏற்கனவே கால அவகாசம் அளிக்கப்பட்ட சூழலில் இனிமேல் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாது என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் எப்போது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கிறார்களோ அப்போது மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வரை 2.61 கோடி மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளனர். மேலும் சுமார் 6 லட்சம் பேர் இன்னும் ஆதார எண்ணை மின் இணைப்புடன் இணைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...
spot_imgspot_imgspot_imgspot_img