
அதிரை வண்டிப்பேட்டை அடுத்த மதுக்கூர் சாலையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து நீர் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து பின்னர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்த சூழலில் சம்மந்தப்பட்ட அந்த ஆழ்துளை கிணற்றின் பைப் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக ஓடுகிறது. கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுமக்கள் அஞ்சும் சூழலில் இதனை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்தில் உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் விணாகாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிரையில் உடைந்தது பிரதான குடிநீர் குழாய்! வீணாகும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!
More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...





