Wednesday, March 18, 2026

அதிரை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைய ஆர்வம் காட்டும் இஸ்லாமியர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் வட மாவட்டங்களில் வளர்ந்து வரும் விடுதலை சிறுத்தை கட்சி தற்போது தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் கால் பதித்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சனாதானத்திற்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் சிறுபான்மை மக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களுக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காவும் அனைத்து தரப்பு மக்களுக்கும் குரல் கொடுப்பதில் முதன்மை பெற்ற வருகிறார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பல சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் முக்கியமான நபரும் தொழிலதிபருமான ஜனாப் ஜமால் முகமது என்பவர் அதிராம்பட்டினம் நகரச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் தன்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் நான் இதுவரையிலும் எந்த கட்சியிலும் உறுப்பினராக இருந்ததில்லை திருமாவளவனின் அரசியல் என்னை ஈர்த்தது அந்த வகையில் நான் என்னை இணைந்து கொண்டேன் என்றும் விரைவில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைவார்கள் எனவும் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img