Saturday, September 13, 2025

Big breaking: அதிரையில் வரும் 25ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வருகிறது 110kv மின்நிலையம்!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெருகிவரும் மின் பயன்பாடு மற்றும் நிலவும் குறைந்த மின் அழுத்தத்தை போக்கும் வகையில் 110kv துணை மின் நிலையத்தை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் வெற்றிபெற்ற திமுகவை சேர்ந்த கா.அண்ணாதுரை, இப்பகுதி மக்களின் மின் தேவை குறித்து சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். இதனை ஏற்று கடந்த ஆண்டு நவம்பரில் அதிரையில் 110kv துணை மின் நிலைய கட்டுமானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் அந்த பணி விரைவில் முடிவடைந்து அக்டோபர் 25ம் தேதி முதல் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட அதிரை 110kv துணை மின் நிலைய திட்டத்தை சட்டப்பேரவையில் வலியுறுத்தி அதற்கு புத்துயிர் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பொதுமக்கள் நன்றியினை தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img