தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகர திமுகவை அக்கட்சியின் நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரித்து திமுக தலைமை அறிவித்துள்ளது. எதிர்வரக்கூடிய மக்களவை தேர்தலை மனதில் வைத்து கட்சி பணியை தீவிரமாக செய்ய ஏதுவாக இந்த நகர கழகங்கள் பிரிப்பு அறிவிக்கப்பட்டிருப்பதாக விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதன்படி 3,4,5,14,15,16,21,22,23,24,25,26 மற்றும் 27 ஆகிய 13 வார்டுகளை உள்ளடக்கிய அதிராம்பட்டினம் கிழக்கு நகர கழகத்திற்கு பொறுப்பாளர் இராம.குணசேகரன் தலைமையில் எஸ்.பி.கோடி, இ.சரஸ்வதி, டி.முத்துராமன், பி.காதர் இப்ராஹிம், பி.செய்யது முகம்மது ஆகியோர் பொறுப்பு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் 1,2,6,7,8,9,10,11,12,13,17,18,19 மற்றும் 20 ஆகிய 14 வார்டுகளை உள்ளடக்கிய அதிராம்பட்டினம் மேற்கு நகர கழகத்திற்கு பொறுப்பாளர் எஸ்.எச்.அஸ்லம் தலைமையில் என்.ஏ.முகம்மது யூசுப், சி.தில்லைநாதன், ஏ.எம்.ஒய்.அன்சர்கான், எஸ்.ரிபாயா, எம்.சேக்தாவூத் ஆகியோர் பொறுப்பு குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.