Monday, December 1, 2025

அதிரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் அமைதி காக்க வேண்டும்!! எம்எல்ஏ வலியுறுத்தல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உதுப்பினருமான கா. அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அதிராம்பட்டினம் நகராட்சியில் நகராட்சியை சுற்றியுள்ள மழவேனிற்காடு, நரசிங்கபுரம், ஏரிப்புறக்கரை, மகிழங்கோட்டை மற்றும் தொக்காலிக்காடு ஆகிய ஊராட்சிகளின் சில பகுதிகளை இணைப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் அந்த ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் (நேற்று) அதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.

பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கண்ட ஊராட் சிகளில் உள்ள பொதுமக்களின் உணர்வுகளுக்கு நிச்சயம் மதிப்பளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக தனது அறிக்கையில் எம்.எல்.ஏ குறிப்பிட்டு இருக்கிறார்.

ஊராட்சி மன்றங்களின் தீர்மானம் இல்லாமலோ, பொதுமக்களின் கருத்து கேட்காமலோ அரசு எந்த முடிவும் எடுக்காது என்பதை தெரிவித்துக் கொள்வதோடு அது வரை சம்பந்தப்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் அமைதி காக்க கேட்டுக்கொள்வதாக கா.அண்ணாத்துரை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img