அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31 இவருக்கு திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது.
குடும்ப சூழல் காரணமாக, குழந்தையின் தாய் மலேசியாவிற்கு பணிக்காக. சென்றாதக கூறப்படுகிறது. இந்த நிலையில் மது போதைக்கு அடிமையான பாலசுப்பிரமணியன் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார் மது குடிக்க பணம் இல்லாமல் விரக்தியில் இருந்த இவன் அவ்வப்போது குழந்தையை துன்புறுத்தி வீடியோ எடுத்து மனைவியிடம் பணம் கேட்டிருக்கிறார்.
வேதனையில் துடித்த தாய் சிவரஞ்சனி
அவ்வப்போது மது போதையில், இருக்கும் இவன் குழந்தையை பிளேடால் கிழித்தும், சிகரெட்டால் சூடுவைத்தும் துன்புறுத்தி வந்துள்ளார்.
இது குறித்து காவல்துறையின் கவனத்திற்கு சமூக ஆர்வலர்கள் கொண்டு சென்றனர், இதனை அடுத்து களத்தில் இறங்கிய அதிராம்பட்டினம் காவல்துறையினர் துரிதமாக சம்பந்தப்பட்ட குழந்தையை மீட்டு தஞ்சை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அதன்பின்னர் குற்றவாளியை போலிசார் கைது செய்தது உரிய விசாரணையில் மனைவியை ஊருக்கு வர வைப்பதற்கு இது போன்ற வன் செயலில் ஈடுபட்டத்தாகவும், மது போதையில் குழந்தையை துன்புறுத்தியதையும் ஒப்பு கொண்டார்.
இதனை அடுத்து பல்வேறு குற்ற வழக்குகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறைக்கு அடைக்கப்பட்டார்.
அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!
More like this
அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...