நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அதிராம்பட்டினம் நகரில் பூத் சிலிப் பெரும்பாலான நபர்களுக்கு சென்றடையவில்லை என பரவலாக தகவல்கள் வருகிறது.
வாக்க்காளர் லிஸ்ட்டில் பெயர் உள்ளவர்கள் பூத் ஸ்லீப் வரவில்லை என இருந்து விடாமல், தங்களிடம் உள்ள ஆவணங்களை எடுத்துக்கொண்டு தங்களின் சார்ந்துள்ள வாக்கு சாவடிக்கு செல்லும் முன் 200 மீட்டர் தொலைவில் இருக்க கூடிய உதவியாளர்களை அனுகி வரிசை எண்ணை பெற்றுகொண்டு வாக்கு சாவடிக்கு செல்ல கேட்டுக்கொள்ள படுகிறது.
மேலும், உரிய ஆவணங்களை வைத்து இருக்கும் வாக்காளர்கள் சிரமம்பாராது, தங்களுடையை வாக்குகளை செலுத்த தவற வேண்டாம் என அதிரை நகர திமுகவின் மேற்கு கழக பொறுப்பாளர் SH. அஸ்லம் கேட்டு கொண்டுள்ளார்.