Sunday, February 1, 2026

89.5% வாக்குகளை பெற்ற திமுக! உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் கைபற்றி திமுக கூட்டணி வெற்றிபெற்றது. இதனையடுத்து தொகுதிவாரியாக வெற்றிபெற்ற மக்களவை உறுப்பினர்களுடன் மாவட்ட, நகர, ஒன்றிய கட்சி நிர்வாகிகளை அமைச்சரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.

அதன் ஒருபகுதியாக தஞ்சை மக்களவை உறுப்பினர் முரசொலியும் மாவட்ட செயலாளர்கள் கா.அண்ணாதுரை, துரை சந்திரசேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

அப்போது தஞ்சாவூர் மக்களவை தொகுதியிலேயே அதிரை மேற்கு நகர கழகத்தில் தான் அதிகபட்சமாக 89.5% வாக்குகளை உதயசூரியன் பெற்றிருப்பதை அறிந்த உதயநிதி, நகர கழக பொறுப்பாளர் S.H.அஸ்லத்தை வெகுவாக பாராட்டினார். இந்நிலையில், இத்தகைய சிறப்பு வாய்ந்த அதிரைக்கு ஓர் விளையாட்டு திடலை திராவிட மாடல் அரசு அமைத்து தர வேண்டும் என்கிற கோரிக்கையையும் எம்.எல்.ஏ கா.அண்ணாதுரையின் பரிந்துரையுடன் அமைச்சர் உதயநிதியிடம் அஸ்லம் மனுவாக வழங்கினார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img