Sunday, February 1, 2026

அதிரை SSMG கால்பந்து தொடர் : பட்டுக்கோட்டையை வீழ்த்தி அதிரை WFC அணி வெற்றி..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை SSM குல் முஹம்மது நினைவு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த 6 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிரை WFC – PFC பட்டுக்கோட்டை அணிகள் மோதிய போட்டி மழை குறுக்கிட்டதால் தடைபட்டது. இதனிடையே இத்தொடரின் 10வது போட்டியில் மோதிய இவ்விரு அணிகளும் வெற்றியை தன்வசமாக்க போராடினர்.

முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் அதிரை WFC அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில், ஒருபக்கம் மீண்டும் அதிரை WFC அணி கோல் அடித்ததும், பட்டுக்கோட்டை அணியினர் தனது ஆட்டத்திறனை வேகப்படுத்தினர். இதன் பலனாக PFC பட்டுக்கோட்டை அணி தனது முதல் கோலை பதிவு செய்தது.

இருப்பினும் போட்டியின் முடிவில் அதிரை WFC அணி 2 – 1 என கோல் கணக்கில் PFC பட்டுக்கோட்டை அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img