அதிராம்பட்டினம்: தஞ்சை சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதில், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அப்துல் காதர், முக்கிய வேட்பாளராக களமிறங்குகிறார்.
அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த அப்துல் காதர், தொழில் காரணமாக தஞ்சாவூர் நகரில் குடியேறியவர். சமூக சேவைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் இந்திய தேசிய லீக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றன. அந்த கூட்டணியின் வேட்பாளராக அப்துல் காதர் தஞ்சை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார் அவர், கருப்பு முருகானந்தம் (பாஜக மாநில பொதுச் செயலாளர்) அவர்களை எதிர்த்து நேரடி போட்டியில் களம் காண உள்ளார்.
இதனால், தஞ்சை தொகுதியில் இந்த முறை கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.








