இந்தியாவின் 69வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், கடந்த 68 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழாவில் 10 நாட்டு தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடுடு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். மேலும் இம்முறை ஆசியன் அமைப்பின் மியான்மர், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், கம்போடியா, லாவோஸ், புருனே என 10 நாடுகள் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ள விழாவில் இந்தியா தனது ராணுவம், கலாச்சார பலத்தின் அணிவகுப்பை நடத்திக்காட்டவுள்ளது. இதனால் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு விஐபி.,க்கள் அமரும் மேடை 100 அடி அகலத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது🤗. அதனை அடுத்து, குடியரசு தின அணிவகுப்பு 90 நிமிடங்கள் நடக்கும். இதில் 23 ஓவியங்களில் 2 ஆசியன் நாடுகளின் கல்வி, வர்த்தகம், கலாச்சாரம், மதம் உள்ளிட்டவற்றை குறிக்கும். சிறப்பு அம்சமாக பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஆகாஷ் ஆகிய ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. எல்லை பாதுகாப்பு படையின் 113 பெண்அதிகாரிகளின் மோட்டார் சாகசமும் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய...





