Monday, December 1, 2025

​பேருந்து கட்டண உயர்வு குறித்த மனு தள்ளுபடி-உயர்நீதிமன்றம்

spot_imgspot_imgspot_imgspot_img

பேருந்து கட்டண உயர்வு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், இதில் தலையிட முடியாது என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 20ஆம் தேதி முதல் பேருந்து கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது. இந்த திடீர் உயர்வால் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதனை எதிர்த்து மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து பலவித போராட்டங்கள், சாலை மறியல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசின் இந்த முடிவினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தது.  

இதனை விசாரித்த நீதிமன்றம், “பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தது. பல்வேறு பொருட்களின் விலை உயர்கிறது. ஒவ்வொன்றிலும் எப்படி நீதிமன்றம் தலையிட முடியும்” என கேள்வி எழுப்பியது. இதனால் தமிழக அரசின் முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், இதுதொடர்பாக 🏛உச்சநீதிமன்றம் பல அறிவுரைகளை தமிழக 🏛அரசிற்கு வழங்கியதாகவும் கூறியுள்ள நீதிமன்றம், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரானமனுவை தள்ளுபடி செய்தது. அனைத்து பேருந்துகளிலும் புதிய கட்டண அட்டவணையை ஒட்டுமாறு 🏛தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img