Tuesday, May 7, 2024

அதிரையில் டி.டி.வி தினகரன் பேச்சு!

Share post:

Date:

- Advertisement -

அதிரை பிப் 12

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கழகத்தின் துணைப்பொது செயலாளரும் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் அவர்கள்  சிறப்புரையாற்றினார், தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் அதன் ஒரு பகுதியாக அதிரையில் இன்று மாலை சிறப்புரையாற்றினார்.

தமிழகத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்ற மக்கள் விரோத ஆட்சி மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று கடுமையாக சாடினார், அம்மா ஆட்சி! அம்மா ஆட்சி!! என்று சொல்லிக்கொண்டு வலம் வரும் இன்றைய ஆட்சியாளர்கள் அம்மா அனுமதிக்காத மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ மற்றும் உதய் மின் திட்டம் என அனைத்து மத்திய அரசின் திட்டங்களுக்கும் கையெழுத்திட்டு தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்கள் என்றார்.

முத்தலாக் சட்டத்தை கொண்டு வர துடிக்கும் மத்திய அரசு சிறுபான்மை மக்களின் மேல் குறிப்பாக சிறுபான்மை பெண்கள் மீது அக்கறை காட்டுவது போல் பிம்பத்தை உருவாக்குவது மிகவும் விந்தையாக இருக்கிறது என்றார். இக்கூட்டத்திற்கு அதிரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...