Thursday, December 18, 2025

தஞ்சை-திருச்சி இருவழிப்பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை-திருச்சி இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 2011-12-ம் ஆண்டு பட்ஜெட்டில் தஞ்சை-திருச்சி இடையிலான இரட்டை அகல ரெயில்பாதை பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது.

தஞ்சையில் இருந்து பொன்மலை வரை 49 கிலோ மீட்டர் தூரத்துக்கு செயல்படுத்த ரூ.450 கோடியில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக ரூ. 190 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தஞ்சை-திருச்சி இடையே ஏற்கனவே மீட்டர்கேஜ் பாதை இருந்த வழித்தடத்தில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த புதிய வழித்தடத்தில் 13 பெரிய பாலங்கள், 90 சிறிய பாலங்கள், 3 இடங்களில் சுரங்கப்பாதைகள் ஆகியவை அமைக்கப்பட்டன. மேலும் இந்த வழித்தடத்தில் உள்ள பூதலூர், சோளகம்பட்டி, திருவெறும்பூர், பொன்மலை ஆகிய ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டன. திருச்சி பொன்மலையில் இருந்து பணிகள் தொடங்கப்பட்டன. தஞ்சை மாவட்டம் சோளகம்பட்டி வரை பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த வழித்தடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகின்றன.

இதன் அடுத்தகட்டமாக தஞ்சை சோளகம்பட்டியில் இருந்து தஞ்சை வரை இரட்டை அகல ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இந்த பணி நிறைவு பெற்றதால் கடந்த 9-ம் தேதி தஞ்சையில் இருந்து சோளகம்பட்டி வரை திருச்சியில் இருந்து 4 பேர் கொண்ட பொறியாளர் குழுவினர் 120 கி.மீ. வேகத்தில் ரெயில் என்ஜினை இயக்கி சோதனை நடத்தினர்.

இதை தொடர்ந்து நேற்று தென்மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் தெற்கு மற்றும் தென்மேற்கு ரெயில்வே முதன்மை நிர்வாக அலுவலர்(கட்டுமானம்) சுதாகர்ராவ் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் 5 டிராலிகளில் சென்று சோதனை நடத்தினர். முன்னதாக தஞ்சை மேம்பாலம் அருகே பூஜைகள் நடத்தப்பட்டது. தஞ்சையில் இருந்து சோளகம்பட்டி வரை இந்த சோதனை நடை பெற்றது.

முன்னதாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சையில் இருந்து சோளகம்பட்டி வரையிலான இரட்டை அகல ரெயில்பாதையில் 35 கி.மீ தூரத்துக்கு சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனையில் தண்டவாளத்தின் உறுதித்தன்மை, தண்டவாளத்தின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள சிலீப்பர் கட்டைகள், ரெயில்வே பெட்டிகள் தூய்மை செய்யும் தொழிற்கூடம், ரெயில்வே நிலையம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும்.

இன்று(செவ்வாய்க்கிழமை) தஞ்சையில் இருந்து சோளகம்பட்டி வரை அதிவேக ரெயில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்படும். இந்த சோதனையின் முடிவுகள் பெங்களூருவில் உள்ள எங்களது தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்கப்படும். அங்கிருந்து இந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படுவது குறித்து பரிந்துரை செய்யப்படும். இந்த பரிந்துரையின் அடிப்படையில் ரெயில்களை எப்போது இயக்குவது என்பதை தென்னக ரெயில்வே முடிவு செய்யும்”என்றார்.

ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வின்போது ஏதாவது குறைகள் இருந்தால் தெரிவிப்பார். இதை எல்லாம் சீர் செய்த பின்னர் வரும் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் இந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...
spot_imgspot_imgspot_imgspot_img