Sunday, February 1, 2026

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த நபருக்கு அடித்தது ஜாக்பாட்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தனது வீட்டு மாடியில் சிறிய ரக விமானங்களை உருவாக்கிய விமானிக்கு, மஹாராஷ்டிர அரசு ரூ.35,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை, அவரின் நிறுவனத்திற்கு அளித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் அமோல் யாதவ், இவர், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் மூத்த விமானியாக பணியாற்றி வந்தார்.

விமான துறையில் மிகுந்த ஆர்வமுடைய அமோல், கடந்த 2010ஆம் ஆண்டு ‘Thrust Aircraft Company’ என்ற விமான நிறுவனத்தை உருவாக்கினார்.

மேலும், தனது வீட்டின் மொட்டை மாடியிலேயே, சிறிய ரக விமானத்தை தயாரிக்கும் பணிகளை தொடங்கினார்.

அதன் விளைவாக, கடந்த 2016ஆம் ஆண்டு 6 பேர் பயணிக்கும் வகையிலான, ஒரு சிறிய ரக விமானத்தை உருவாக்கினார்.

இதன் மூலம், ஒட்டுமொத்த இந்தியாவும் இவரை வியந்து பார்த்தது. அதனைத் தொடர்ந்து, அமோல் யாதவின் ஆறு ஆண்டுகால கடின உழைப்பை பாராட்டிய ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம், அவரது விமானத்திற்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தது.

சமீபத்தில், விமான போக்குவரத்து ஆணையம், இவரது சிறிய ரக விமானம் வானில் பறக்க அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், தற்போது மஹாராஷ்டிராவில் நடந்து வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், அம்மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், அமோல் யாதவின் நிறுவனத்திற்கு, சிறிய ரக விமானங்களை தயாரித்து வழங்க, ரூ.35,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், அமோல் யாதவின் நிறுவனம் மும்பையை அடுத்துள்ள பால்கர் மாவட்டத்தில், சுமார் 157 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்த உள்ளது.

இங்கு அமைக்கப்பட உள்ள தொழிற்சாலையில், 19 பேர் பயணிக்கும் வகையிலான 1,300 சிறிய ரக விமானங்கள் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, நாட்டிலேயே விமானங்கள் தயாரிக்கும் முதல் மாநிலம், எனும் சிறப்பை மஹாராஷ்டிரா மாநிலம் பெற்றுள்ளது. அமோல் யாதவ், தனது விமானத்திற்கு VT-NMD என்ற பெயரில் பதிவு செய்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img