நாளை மறுநாள் முழு அடைப்புக்கு அதிரை மக்கள் ஆதரவு தர வேண்டும்.
தமிழக மக்களின் உயிர் நாடியான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காகத உச்ச நீதிமன்ற உத்தரவின்படி . காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத் தவறிய மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசிற்கு உரிய அழுத்தத்தை மாநில அரசு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாளை மறுநாள் நாள் நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் அதிரை நகர காங்கிரஸ் தலைவர் ஜலீலா மொய்தீன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
இதில் திமுக, காங்கிரஸ் மமக முஸ்லிம் லீக் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி அனைத்து நிருவனங்களுக்கும் முறையாக துண்டு பிரசுரங்களை வழங்கி ஒத்துழைக்க கோருவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.