அதிரை எக்ஸ்பிரஸ்:- காஸாவில் மருத்துவ உதவி புரிந்த உதவி மருத்துவர் ரஜான் என்ற பெண்மணியை இஸ்ரேலிய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.
பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பு செய்து இருக்கும் இஸ்ரேலிய படைகளையும்,ஜெரூசலத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் அமெரிக்க தூதரகத்தை வெளியேற்ற பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும்,போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர். அப்படியிருக்கையில் போராட்டம் செய்கிறவர்களை துப்பாக்கியில் சுடுவதும்,இரும்பு ராடுகளை கொண்டு தாக்குவதுமாக இஸ்ரேலிய படைகள் காட்டுமிராண்டி செயல்களை செய்து வருகிறது.
இத்தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு களத்திலேயே மருத்துவ உதவிகளை செய்து வந்த ரஷான் அல் நஜ்ஜர் (21 வயது) என்ற மருத்துவரை துப்பாக்கியால் சுட்டது காட்டுமிராண்டி கும்பல்.
இது குறித்து எந்த நாடும் குறிப்பாக ஐநாவும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.