Sunday, May 5, 2024

அதிரையில் தீ விபத்து..

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காந்தி நகரில் தீ விபத்து ஏற்பட்டு குடிசை எரிந்து சாம்பலானது.

காந்தி நகரில் வசிக்கும் மாரியப்பன் என்பவரின் வீடு இன்று இரவு எதிர்பாராத விதமாக தீ பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ மலமலவென குடிசை முழுதும் பரவியது.

இதனை கண்ட பொதுமக்கள் பலர் எரிந்துகொண்டிருந்த மாரியப்பனின் குடிசையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தண்ணீரை வாரி இரைத்தனர்.

இருப்பினும் இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் பொதுமக்கள் தினறினர்.

இதனால் மாரியப்பனின் வீடு முழுவதுமாக எரிந்து சாம்பலானது.

முன்னதாக குடிசையில் தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக தீயணைப்பு துறைக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தும் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வராததே குடிசை முழுவதுமாக எரிந்ததற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

தீ விபத்துக்கள் ஏற்படும் நேரத்தில் பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டுமெனில், தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...