Monday, December 1, 2025

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து… அதிரை உள்ளிட்ட ஊர்களில் பல மணிநேரமாக மின் தடை…!

spot_imgspot_imgspot_imgspot_img

மதுக்கூர் வாடியக்காடு பகுதியில் 110 KV கொண்ட துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுக்கூர், துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட ஊர்கள் மின்சாரம் பெறுகின்றன.

இந்நிலையில் இன்று(15/04/2019) இரவு 8 மணியளவில் திடீரென துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக பரவிய தீ கொழுந்துவிட்டு எரிவதால், அதனை அணைக்க தீயணைப்பு படையினர் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இதனால் இத்துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெரும் மதுக்கூர், துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், மீண்டும் மின் விநியோகம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.

ஆனால் இந்த மின்தடையை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img