Tuesday, March 24, 2026

அதிரையில் தேவாலயம் சூறை! சிக்கினார் இளங்கோ!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காவல் நிலையம் அருகே உள்ள புனித பாத்திமா அன்னை தேவாலயம் மர்ம நபரால் சேதப்படுத்தப்பட்டது. குறிப்பாக சிலைகளும் கண்ணாடிகளும் உடைத்தெறியப்பட்டன. இதனால் பதற்றமான சூழல் உருவான நிலையில், தேவாலயத்தை சேதப்படுத்திய நபரை கண்டுபிடித்து தண்டிக்கும்படி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் தேவாலய நிர்வாகம் சார்பில் புகார் அளித்தனர். இந்தநிலையில், புனித பாத்திமா அன்னை தேவாலயத்தை சேதப்படுத்திய நபரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவை சேர்ந்த இளங்கோ என்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை குடும்பத்தினரை அழைத்து எச்சரித்த காவல்துறையினர், இளங்கோவினை விடுவித்தனர். மேலும் தேவாலயத்தில் உடைக்கப்பட்ட கண்ணாடிகளை இளங்கோவின் குடுபத்தினர் சரி செய்து தரவும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img