Saturday, September 13, 2025

காங்கிரஸ் நிர்வாகியை காஃபி குடிக்கலாம் வாங்க என அழைத்து சென்று தங்கள் கட்சியில் சேர்த்துவிட்ட பாஜகவினர் !

spot_imgspot_imgspot_imgspot_img

பெங்களூரு மாநகராட்சி உறுப்பினராக இருக்கும் வசந்தகுமார், கடந்த 3-ம் தேதி அம்மாநில முதல்வர் எடியூரப்பா தலைமையில் திடீரென காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த வசந்த குமார் தான் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பியுள்ளதாக கூறினார். பாஜக தலைவர்கள் காஃபி குடிக்க தன்னை அழைத்துச் சென்றதாகவும், அங்கு தன்னை கட்டாயப்படுத்தி பாஜகவில் இணைய சொன்னதாகவும் வசந்தகுமார் கூறியுள்ளார்.

கட்டாயப்படுத்தியதால் பாஜகவில் இணைந்தேன் என்று கூறிய அவர், நான் காங்கிரஸ்காரன் தான் என உறுதியாக கூறுகின்றேன் என்று தெரிவித்தார்.

பேட்டியின் போது உடன் இருந்த மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ், “பாஜக எந்த அளவுக்கு கீழ் தரமான அரசியல் செய்யும் என்பதற்கு இதுவே உதாரணம் என்று கூறினார்.”

காங்கிரஸ் நிர்வாகி திடீரென பாஜகவில் இணைந்து 2 நாட்களில் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பியது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...
spot_imgspot_imgspot_imgspot_img