அதிராம்பட்டினத்தின் பெரும்பாலான பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஒப்பந்தாரர்கள் மூலம் செயல் படுத்தப்படும் இத்திட்டத்திற்கு போதுமான நிதிகள் ஒதுகீடு செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி ஆஸ்பத்திரி தெரு ரஹ்மானியா பள்ளி வாசல் முதல் ஆஸ்பத்திரி ரோடு வரையிலான சாலைக்கு சுமார் 41 லட்சம் வரை பேரூராட்சி நிர்வாகம் ஒதுகீடு செய்யபட்டு விட்டன.
போதுமான நிதியை பேரூராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்தும் வீடிடித்த மண்ணை கொண்டு தார் சாலை அமைக்கும் அவலம் நடந்து கொண்டுள்ளன.
எனவே அப்பகுதி மக்கள் தரமான தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இல்லையேல் ஆறே மாதத்தில் சிதிலமடைந்து மீண்டும் சாலையமைக்க போராடும் அபாய நிலை ஏற்படும்.
எனவே அப்பகுதி மக்கள் ஒப்பந்ததாரரிடம் தரமான தார் சாலையமைக்க நிற்பந்திக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.