அதிரை தாரூத் தவ்ஹீத் சார்பாக பல்வேறு மார்க்க விளக்க பொதுக் கூட்டங்கள் அதிரையில் நடைபெறுவது வழக்கம். இதனடிப்படையில் தற்போது உள்ள அரசியல் சூழலில் மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நாளைய தினம் (24.01.2020) வெள்ளிக்கிழமை அதிரை தாரூத் தவ்ஹீத் சார்பாக ஜும் ஆ சிறப்பு சொற்பொழிவு நடைபெற உள்ளது.
அதிரை A.L மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த ஜும் ஆ சிறப்பு சொற்பொழிவிற்கு மவ்லவி ஹுசைன் மன்பஈ இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்கிற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.