Monday, February 2, 2026

தடை என்னாச்சு ? சர்வ சாதாரணமாக புழங்கும் பிளாஸ்டிக் பைகள் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக அரசு கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகளுக்கான தடையை மாநிலம் எங்கும் அமல்படுத்தி சில மாதங்கள் மட்டுமே சுறுசுறுப்பாக செயல்பட்டது.

இதன்பிறகு அழுத்துபோன அதிகாரிகள் கடை குடோன்களில் நடத்திய திடீர் சோதனைகளை கைவிட்டு விட்டனர்.

இதன் காரணமாக தமிழகத்தில் சர்வ சாதாரணமாக பிளாஸ்டிக் பைகள் புழங்குவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து நம்மிடையே பேசிய ஒருவர், தமிழக அரசு லாட்டரி,குட்கா,உள்ளிட்ட மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையின் பலனாக இதனை எல்லாம் தடை விதித்தார்.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அம்மாவின் நாமத்தை முழங்கி கொண்டே அவர் தடை செய்த, எதிர்த்த திட்டங்களுக்கு எல்லாம் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கின்றனர் என்றார்.

எனவே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கான தடை முழுமையாக செயல்படுத்த அதிகாரிகள் முனைப்பு காட்டிட வேண்டும்.

வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பை நல்கி நாளைய நமது தலைமுறையினர் நிம்மதியாக வாழ வழிவகை செய்திடல் அவசியமாகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img