Sunday, February 1, 2026

அதிரையில் கொரோனாவை பரப்பும் போலி நிருபர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

தொட்டாலே தொற்றிக்கொள்ளும் உயிர்க்கொல்லி நோயான கொரோனாவை வீழ்த்த அதிரையே அடங்கி கிடக்கும் நிலையில், சில ரோடுசைடு ரோமியோக்கள் சாலைகளில் அவசியமின்றி வலம்வருகின்றனர். அவ்வாறு சுற்றித்திரியோரை பிடித்து காவல்துறையினர் விசாரிக்கும்போது, தங்களை நிருபர்கள் என அறிமுகப்படுத்துக்கொண்டு அங்கிருந்து வேறொரு இடத்திற்கு உலாவ சென்றுவிடுகிறார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் காவல்துறையினர், விழிபிதுங்கியுள்ளனர்.

இந்நிலையில் தங்களை நிருபர்கள் என சொல்லிக்கொள்ளும் நபர்களிடம் முறையான அடையாள அட்டை உள்ளதா என்பதை சரி பார்ப்பதுடன் சம்மந்தப்பட்ட ஊடகத்தின் அதிகாரப்பூர்வ எண்ணை தொடர்புக்கொண்டு அந்த நபரின் விவரங்களை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என காவல்துறையினரை ஊடகவியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு முறையான ஆவணங்கள் இல்லாத போலி நிருபர்களை கண்டறிந்து தொற்று நோயை பரப்ப முயன்ற குற்றத்திற்காகவும் மோசடி செய்ததற்காகவும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பு: அரசின் பதிவு பெற்ற அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நிருபர்களுக்கு முறையான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img