Saturday, May 18, 2024

அதிரையில் மொபைல் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி, வியாபாரிகள் அச்சம்….!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் செயல்பட்டு வரும் மொபைல் கடையில் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் திருட முயற்சி.

கொரோனா தொற்று காரணமா ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் ஒத்துழைக்கும் வண்ணம் வியாபாரிகள் கடைகளை அடைத்து இருக்கின்றனர்.இந்நிலையில் நேற்று(26.3.2020) குறிப்பிட்ட மொபைல் கடையில் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயற்சித்து இருக்கின்றனர்,பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததை கண்டு இரண்டு பூட்டையும் உடைத்து விட்டு ஓடி சென்று விட்டனர்.

ஊரடங்கு உத்தரவால் வியாபாரிகள் கடைகளை அடைத்து ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கின்றனர், ஆனால் கடைகளுக்கு பாதுகாப்பின்றி கொள்ளையர்கள் பூட்டை உடைத்து செல்லும் வகையில் இருக்கிறது.

இந்த சம்பவத்தால் கடைகளை அடைத்து இருக்கும் வியாபாரிகள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.உடனடியாக காவல்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பது வியாபாரிகளின் கோரிக்கையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...