Sunday, May 5, 2024

இன்று முதல் அத்தியாவசிய கடைகள் திறப்பதில் புதிய நடைமுறை அமல்…!

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாட்டில் மளிகை, காய்கறி கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களை இன்று முதல் ஏப்ரல் 14 வரை பிற்பகல் 2.30 மணிக்கு மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இவை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

பெட்ரோல் பங்குகள் காலை 6 மணிமுதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும். அதே சமயம் அரசு வாகனங்கள், அவசர பணி ஊர்திகள் போன்றவற்றுக்கு தனியாக பெட்ரோல் பங்குகள் முழு நேரமும் இயங்கும்.
அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, மளிகை போன்ற பொருட்களை விற்பனை செய்யும் கோயம்பேடு சந்தை உட்பட அனைத்து கடைகளும் 6 மணி முதல் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும்.

ஆனாலும் மருந்து கடைகள், பார்சல் மட்டும் வழங்கும் உணவகங்கள் முழுநாளும் செயல்பட தடையில்லை. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்க ஸ்விகி, ஸோமோட்டோ, ஊபர் ஈட்ஸ் போன்ற உணவுப் பொருட்களை விநியோகிக்கும் செயலிகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
காலை மதியம் இரவு என மூன்று வேளையும், நேரக் கட்டுப்பாடுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...