Monday, February 2, 2026

அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பின் செயல்வீரர்களுக்கு தன்னார்வலர்கள் அடையாள அட்டை அரசு சார்பில் வழங்கல்…!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் செயல்வீரர்களுக்கு பேரூராட்சியின் மூலம் தன்னார்வலர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் தன்னார்வலர்கள் அரசோடு இணைந்து பணியாற்றலாம் என்று அறிவித்து இருந்தது, அதனடிப்படையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 10000க்கும் மேற்பட்ட PFI அமைப்பினர் பதிவு செய்து இருக்கிறார்கள்.இதில் அதிரையை சேர்ந்த 25 பேர் பதிவு செய்து இருந்தனர்.

அதனையடுத்து, பதிவு செய்திருந்த அனைவருக்கும் அரசின் அடையாள அட்டைகள் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலு வழங்கினார். அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், வழக்கறிஞர் முகமது தம்பி, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் ஏரியா தலைவர் முகமது ஜாவித் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் அதிரை மக்களின் தேவைகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு எப்போதும் துணை நிற்கும் என்று கூறினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img