Tuesday, May 7, 2024

அதிரை: காங்கிரஸ் கட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் நகரில் பரவும் கொரோனா தொற்று காரணமாக ஏராளமான தற்காலிக கணக்கெடுப்பு, தூய்மை பணிக்கு என பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முழு கடையடைப்பு அமலில் இருப்பதால் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் உள்ளது.

இதனை கருத்தில் கொண்ட அரசியல் கட்சிகள் தன்னார்வ தொண்டு அமைப்புகள் உணவுகள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

அதன் படி இன்று நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள் பேரூராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் தமீம் அன்சாரி,முன்னாள் தலைவர் ஜலீலா முஹைதீன், கார்த்திகேயன், நகர துணைத்தலைவர் சாமி நாராயண சாமி, நகர பொருளாளர் திலகராஜ கட்டபொம்மன்,துணை செயலாளர் எம் ராஜேந்திரன் மற்றும் கட்சியின் முன்னோடிகள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...