Saturday, September 13, 2025

அதிரையில் கொரோனாவை பரப்பும் போலி நிருபர்கள் : உஷார் ரிப்போர்ட்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தொட்டாலே தொற்றிக்கொள்ளும் உயிர்க்கொல்லி நோயான கொரோனாவை வீழ்த்த அதிரையே அடங்கி கிடக்கும் நிலையில், சில ரோடுசைடு ரோமியோக்கள் சாலைகளில் அவசியமின்றி வலம்வருகின்றனர். அவ்வாறு சுற்றித்திரியோரை பிடித்து காவல்துறையினர் விசாரிக்கும்போது, தங்களை நிருபர்கள் என அறிமுகப்படுத்துக்கொண்டு அங்கிருந்து வேறொரு இடத்திற்கு உலாவ சென்றுவிடுகிறார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் காவல்துறையினர், விழிபிதுங்கியுள்ளனர்.

இந்நிலையில் தங்களை நிருபர்கள் என சொல்லிக்கொள்ளும் நபர்களிடம் முறையான அடையாள அட்டை உள்ளதா என்பதை சரி பார்ப்பதுடன் சம்மந்தப்பட்ட ஊடகத்தின் அதிகாரப்பூர்வ எண்ணை தொடர்புக்கொண்டு அந்த நபரின் விவரங்களை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என காவல்துறையினரை ஊடகவியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு முறையான ஆவணங்கள் இல்லாத போலி நிருபர்களை கண்டறிந்து தொற்று நோயை பரப்ப முயன்ற குற்றத்திற்காகவும் மோசடி செய்ததற்காகவும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பு: அரசின் பதிவு பெற்ற அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நிருபர்களுக்கு முறையான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...
spot_imgspot_imgspot_imgspot_img