Sunday, May 5, 2024

அமைச்சர் ஜெயக்குமாருக்கு சீமான் எச்சரிக்கை

Share post:

Date:

- Advertisement -

சீன இயந்திரம் தொடர்பான
மீனவர்கள் பிரச்சனையில் அமைச்சர்
ஜெயக்குமார் தீர்வு காணவில்லை
என்றால் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி
கையில் எடுக்கும் என்று சீமான்
எச்சரித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் பகுதியில்
மீனவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்த பின்னர்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்
சீமான் செய்தியாளர்களை
சந்தித்தார். அப்போது, சீன இயந்திரந்தை
பயன்படுத்துவதன் மூலம் 2 மாதங்களில்
பிடிக்க வேண்டிய மீன்களை ஒரே மாதத்தில்
பிடித்து விடுகின்றனர். இதனால் விவசாயம்
அழிந்தது போல் மீன்பிடி தொழிலும்
அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை
நீடித்தால் மீனவர்கள் நாடு விட்டு நாடு
சென்று மீன்பிடிக்கும் அவலநிலை தான்
ஏற்படும்.
இதனை எதிர்த்து போராடிய மீனவர்கள் மீதும்
பெண்கள் மீதும் காவல்துறை
தாக்குதல் அநாகரீகமான
காட்டுமிரண்டிதானம். அவர்களின்
உணர்வுகளுக்கு மதிப்பளித்து சீன
இயந்திரத்தை பயன்படுத்த அரசு உரிய
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மீனவர்கள் போராட்டத்தை நாங்கள் கையில்
எடுத்து கொள்ளாமல் அமைச்சர்
ஜெயக்குமார் தகுந்த நடவடிக்கை எடுக்க
வேண்டுமென்று சீமான் கேட்டுக்
கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...