COVID 19 வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுபடுத்தும் நிமித்தமாக தமிழ்நாடு அரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால்,முதலமைச்சர் அறிவிக்கப்பட்டபடி மீன்வளத்துறை மூலம் மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஊரடங்கு காலத்தில் உறுப்பினர் ஒருவருக்கு ரூ.1000 வீதம் சிறப்பு நிவாரண தொகை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்ட உள்நாட்டு மீன்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் பதிவுசெய்யப்பட்ட மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் தங்கள வங்கி கணக்கில் மீனவர் நலவாரியம் மூலம் ரூ 1000 சிறப்பு நிவாரணத்தொகை கிடைக்க பெறவில்லையெனில் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு (தொலைபேசி 04362 235389) தங்களுடைய மீனவர் நலவாரிய அடையாள அட்டை,ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து சிறப்பு நிவாரண உதவித்தொகை பெற்று கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.