Saturday, May 4, 2024

விரைவில் உயரப்போகிறது இந்தியாவில் இணைய சேவையின் குறைந்தபட்ச வேகம்!

Share post:

Date:

- Advertisement -

புதுதில்லி: இந்தியாவில் இணையத்தின் குறைந்தபட்ச வேகம் தற்போதுள்ள 512 கேபிபிஎஸ் என்னும் அளவில் இருந்து 2 எம்பிபிஎஸ் அளவுக்கு விரைவில் உயரப் போவதாக தொலை தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தித்தாள் ஒன்றுக்கு தொலை தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் தொலை தொடர்புத் துறை நிறுவனங்கள் தங்களுடைய 3G மற்றும் 4G சேவை விளம்பரங்களில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு நெருக்கமாக கூட இணைய சேவையின் வேகம் இருப்பதில்லை. இந்நிலையில் நாம் விரைவில் 5G சேவைகளை அறிமுகப்படுத்தும் நிலையில் இருக்கிறோம். உண்மையில் நமது இணைய சேவையின் குறைந்தபட்ச வேகம் என்பது மிகவும் குறைவு. தேவைப்படும் அளவுக்கான சேவைகளை நம்மால் வழங்க முடிவதில்லை.
நாடு கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டல் பொருளாதார மயத்துக்கு மாறி வரும் சூழ்நிலையில் இந்தியாவின் இந்தியாவில் இணைய சேவையின் வேகத்தினை அதிகரிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே இந்தியாவில் இணையத்தின் குறைந்தபட்ச வேகம் தற்போதுள்ள 512 கேபிபிஎஸ் என்னும் அளவில் இருந்து 2 எம்பிபிஎஸ் அளவுக்கு விரைவில் உயர்த்தப்பட உள்ளது. இது குறைந்தபட்ச அடிப்படையாகும். இதனை விடக் கூடுதலாக கூட குறைந்தபட்ச அடிப்படை வேகம் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக இதனை விடக் குறையாது.
இவ்வாறு அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இணைய சேவையின் வேகம் குறைவாக இருப்பதற்கான பல்வேறு காரணிகள் குறித்தும், அதனை சரிபடுத்துவதில் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களின் பங்கு குறித்தும், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ‘டிராய்’ சமீபத்தில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...