பேராவூரணி, ஜூன்.21-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பைங்கால் கிராமத்தின் தெற்கு கடைசி எல்லையும் புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு வடக்கு எல்லையுமான கல்லணை கால்வாய் பெரிய ஆறு இரண்டு கிராமத்திற்கும் எல்லையில் சுமார் 75 அடி நீளத்தில் உடைப்பு ஏற்பட்டது.இதனால் கிழக்கு பகுதியில் 600 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த உளுந்து,பயிறு,எள்,கரும்பு, நெல்,தென்னங்கன்றுகள் வெள்ளத்தில் அடியோடு அடித்து செல்லப்பட்டது.இதனால் ரூ.50 லட்சம் நாசமடைந்துள்ளது.பாதிக்கப்பட்ட இடத்தை பைங்கால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் மா.பழனிவேல், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா சுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் சங்கவி மதன்குமார்,பேராவூரணி வட்டாட்சியர் க. ஜெயலட்சுமி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்,200 கிராம விவசாயிகள் ஆற்றில் இறங்கி உடைப்பை அடைப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...










