அதிராம்பட்டினம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதிரை கிளை நிர்வாகம் புதிதாக நியமிக்கப்பட்டு கட்சி பணிகள் தீவீரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் கபசுரக் குடிநீர் வழங்க தீர்மானிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 9மணி முதல் 12-30 வரை வழங்கப்பட்டது.
சுமார் 300 பயனாளிகள் வரை பயன் பெற்ற இந்த நிகழ்வில் நகர நாதக செயலாளர் ஜெஹபர் சாதிக், ஊடக அணியின் மொய்னுதீன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்கள்.
சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்கினார்.