Monday, May 6, 2024

மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் காற்றில் பறக்கவிடப்பட்ட சமூக இடைவெளி

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் சமூக இடைவெளி,முக கவசம் அணியாமல் மீன் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் பரவலை தடுக்க அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.குறிப்பாக தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று(ஜூலை.21) செவ்வாய் கிழமை விசைப்படகுகள் கடலுக்கு சென்று திரும்பகூடிய நாள் அதனால் அதிகாலை முதலே மல்லிப்பட்டிணம் துறைமுத்தில் நடந்து,இருசக்கர வாகனம்,கார்களிலும் மீன்கள் வாங்க சாரை சாரையாக வியாபாரிகள், பொதுமக்கள் வருகை வந்திருந்தனர். இதில் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கொரோனா வீரியத்தை புரியாமல் வாங்கி செல்கின்றனர்.

தொடர்ந்து இதுபோல சமூக இடைவெளி, முக கவசம் ஆகியவற்றை பின்பற்றாததை பார்க்கையில் அரசின் நடவடிக்கைகள்,அறிவுரைகள், எச்சரிக்கைகள் யாவும் விழலுக்கு இறைத்த நீராகிவிடுமோ என்ற அச்சம் எழுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...