தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் பல்வேறு நகரங்களிடையான 7 சிறப்பு ரயில்கள் ஆகஸ்டு 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கச் சிறப்பு ரயில்கள் இயக்குவதை நிறுத்த வேண்டும் எனத் தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இதனால் ஆகஸ்டு 15 வரை இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் ஆகஸ்டு 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தோருக்கு முழுத் தொகையும் திருப்பிச் செலுத்தப்படும் என அறிவித்துள்ளது.
கவுன்டரில் பயணச்சீட்டு எடுத்தவர்கள் பயண நாளில் இருந்து 6 மாதம் வரை திருப்பிக் கொடுத்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் – புதுடெல்லி இடையிலான ராஜதானி சிறப்பு ரயில் தொடர்ந்து இயங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவை ரத்து !
More like this
பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...
அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...
அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...