Sunday, May 12, 2024

சென்னையிலிருந்து மீண்டும் இயங்குகிறது சர்வதேச விமானங்கள்!!

Share post:

Date:

- Advertisement -

சென்னை விமான நிலையத்தில் இருந்து நான்கு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.

கொரோனா பாதிப்பு காரணமாக நான்கு மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. வந்தே பாரத் திட்டம் மூலம் இயக்கப்பட்ட விமானங்களில் வருவோர் தனிமைப்படுத்தப்படும் அச்சத்தால் கொச்சி போன்ற அண்டை மாநில நகரங்களுக்கு வந்து சாலை வழியாக தமிழகத்திற்கு வந்தனர்.

பெரும்பாலான மத்திய அரசின் திட்டமான வந்தே பாரத் விமானக்கள் பெங்களூர், கொச்சி போன்ற நகரங்களில் இயக்கப்பட்டதால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடியே காணப்பட்டது. தற்போது தமிழக அரசின் தனிமைப்படுத்தும் நாட்கள் தளர்த்தப்பட்டுள்ளன.

COVID19 நெகட்டிவ் மருத்துவச் சான்றுடன் வருவோரை 7 நாட்கள் தனிமைப்படுத்துதலில் வைக்க வேண்டியதில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனைத் தோடர்ந்து சிறிய அளவில் மீண்டும் சர்வதேச விமான சேவைகள் சென்னை விமான நிலையத்தில் தொடங்கும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு (அமீரகத்திற்கு) சிறிய அளவில் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் பயண திட்டத்தை  வெளியிட்டுள்ளன.

ஆகஸ்ட் 30 தேதி வரை 7 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அடுத்த மாதம் செப்டம்பர் 19 ம் தேதி அமீரகத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளதால் விமானப் போக்குவரத்து சேவைகள் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...