கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) அதிராம்பட்டினம் கிளை, பட்டுக்கோட்டை விதைகள் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து அதிராம்பட்டினம் காசாரா ஏரிக்கரையில் பனை விதை நடும் விழா இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பட்டுக்கோட்டை விதைகள் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் சத்திய காந்த் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் கே.நியூட்டன், டாக்டர் பி.சதாசிவம், CBD அமைப்பின் தஞ்சை மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.
இதில் 5000 பனை விதைகள் நடுவதற்கு திட்டமிட்டு, முதற்கட்டமாக 100 பனை விதைகள் அதிராம்பட்டினம் காசாரா ஏரிக்கரை பகுதியில் நடப்பட்டன.
இதில் சமூக ஆர்வலர் நெப்போலியன், CBD அதிராம்பட்டினம் நிர்வாகிகள் சமீர், அஜீத் குமார், சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.