Saturday, September 13, 2025

25,000 உறுப்பினர் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து

spot_imgspot_imgspot_imgspot_img

குறைந்தபட்சம் 25,000 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தமிழ்நேசன், திருச்சி அசூரில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனத்திற்கு தடை விதிக்க கோரி மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த, நீதிபதிகள் கிருபாகரன்,புகழேந்தி அமர்வு, பணம் பறிக்கும் நோக்கத்துடன் தொடரப்பட்டதாக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

தமிழகத்தில் லெட்டர் பேட் அரசியல் கட்சிகள் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக கூறிய நீதிபதிகள்,இதனைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அரசியல் கட்சி தொடங்க தேர்தல் ஆணையம் எதன் அடிப்படையில் அனுமதி வழங்குகிறது? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

குறைந்த பட்சம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே கட்சி என அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகம், சட்டத்துறை, பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img