Monday, December 1, 2025

ஊர்சுற்றினால் கோவிட் டெஸ்ட் ! அதிரையில் சுகாதார அதிகாரிகள் அதிரடி !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் ஊரடங்கை மீறி ஊர்சுற்றும் இளைஞர்களே !கொரோனா பரிசோதனைக்கு தயாரா?

கொரோனா கால ஊரடங்கில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏதும் இல்லததால் முழு நேர ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அவசர தேவை என பொய் கூறி திரிபவர்களை பிடித்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் திட்டம் தீட்டி வருகிறார்கள் !

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோயின் தாக்கத்தால் நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறது.

ஆனால் அதிரை நகரில் அத்தியாவசிய தேவையின்றி பொய்யான தகவல்களை கூறி இளைஞர்கள் பலர் ஊர் சுற்றி வருகிறார்கள் என்ற குற்றசாட்டை அதிரை காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த ஆய்வு மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர்கள் நாளை மறுநாள் முதல் அவசிய தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்களை பிடித்து கொரோனா பரிசோதனை உட்படுத்த உள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்க்காக அதிராம்பட்டிணம் அரசு மருத்துவமனையில் போதிய அளவு கொரோனா பரிசோதனை எக்யூப்மெண்ட்கள் வரவலைக்கப்பட்டு தயாராக இருக்கிறது.

நோய் அறிகுறி உள்ளவர்களை உடனடியாக பட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேவையற்ற வெளி சுற்றலை அறவே இளைஞர்கள் தவிர்க்குமாறும், அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் நபர்கள் அதற்கான சான்றை காவல்துறை,சுகாதார அதிகாரிகளிடம் கான்பிப்பது கட்டாயமாகும்.

இது தவிர இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஓட்டுனர் உரிமம், வாகன காப்பீடு உள்ளிட்டவற்றுடன் முக கவசம், தலை கவசம் அணிந்து செல்வது கட்டாயமாகும்.

மேற் கூறப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் கூட சட்ட நடவடிக்கக்கு உட்படுத்தப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளன.

எனவே தேவையின்றி வெளியில் சுற்றி சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் மாட்டிகொள்ளாதீர்கள் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் இளைஞர்களை பெற்றோர்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என அறிவுருத்துகிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img