Saturday, September 13, 2025

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்.!

spot_imgspot_imgspot_imgspot_img

நாகாலாந்தின் ஆளுநராக உள்ள ஆர்.என். ரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநரான பன்வாரிலால் புரோஹித், பஞ்சாபின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை வகித்துவரும் நிலையில், அவர் இனிமேல் பஞ்சாபின் ஆளுநராக நீடிப்பார் என அறிவிப்பு.

அசாமின் ஆளுநரான பேராசிரியர் ஜகதீஷ் முகி, நாகாலாந்தின் பொறுப்புகளையும் கூடுதலாக கவனிப்பார். ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் குர்மித் சிங் உத்தராகண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநரான ஆர்.என். ரவி, பிஹாரைச் சேர்ந்தவர். கேரள மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

2019ஆம் ஆண்டிலிருந்து இவர் நாகாலாந்தின் ஆளுநராக இருந்து வருகிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...
spot_imgspot_imgspot_imgspot_img