எதிர்வரும் பிப்ரவரி 19 ம் தேதி பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இன்று அதிரை நகர தமுமுக தஞ்சை தெற்கு சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் தமுமுக அலுவலத்தில் நடைபெற்றது.
இதில், 27 வார்டுகளை கொண்ட அதிரை நகராட்சியில் தமுமுக ஆதரவோடு 5 வார்டுகளில் சுயேட்சையாக களம் காண்பதாகவும், இதர வார்டுகளில் வேட்பாளர்களுக்கு ஏற்ப அதிரை நகர தமுமுக ஆதரவளிக்க உள்ளதாகவும் தமுமுகவின் மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அதிரை நகர தமுமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.