Saturday, September 13, 2025

பிரதமர் மோடி துவக்கி வைக்கும் அதிவிரைவு ரயிலை அதிரையில் மறிக்க திட்டம்?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்து மக்கள் பன்னெடுங்காலமாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தொழில் செய்து வருகிறார்கள். இவ்வூருக்கு ஆங்கிலேயே ஆட்சி காலத்திலேயே ரயில் வழித்தடம் அமைத்து முக்கியத்துவம் வழங்கியுள்ளது.

இவ்வூர் கடற்கரை தொழில் சார்ந்த ஊர் என்பதாலும் தேங்காய் உள்ளிட்ட விவசாய பொருட்கள் உற்பத்தியில் முன்னோடி நகரமாக விளங்கி வருகிறது. வேதாரண்யத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிக உப்பு உற்பத்தி செய்யும் ஊராக அதிராம்பட்டினம் விளங்கியது.

இங்கு உற்பத்தியாகும் உப்பு உள்ளிட்ட விவசாய பொருட்களை பெருநகரங்களுக்கு எடுத்து செல்ல ஏதுவாக இந்த ரயில் வழித்தடம் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தன.

இவ்வூர் மக்கள் உலகில் பலபகுதிகளுக்கு சென்று பொருளீட்டி அந்நிய செலவானியை அதிகளவில் அள்ளி தருகிறார்கள்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பட்டுக்கோட்டைக்கு அடுத்தப்படியாக அதிக வருவாயை ஈட்டும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு ரயில் அதிரையில் நிற்காது என்ற அறிவிப்பு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அகல ராயில்பாதை அமைத்த பிறகு பல சட்ட போராட்டங்களை சமரசமின்றி முன்னெடுத்து வெற்றிகண்ட ஊருக்கான உபத்திரத்தை செய்திருக்கிறது தென்னக ரயில்வே நிர்வாகம்.

இந்த நிலையில் தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளதாகவும் அந்த ரயிலின் அட்டவனையில் அதிராம்பட்டினம் நிறுத்தமில்லை என தெரிவிக்கிறது.

இதனால் அதிராம்பட்டினம் ரயில் உபயோக்கிப்பாளர்கள்,பொதுமக்கள்,வியாபாரிகள் ஒன்றிணைந்து பிரதமர் துவக்கி வைக்கும் இந்த ரயிலை அதிரையில் மறித்து போராட்டம் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள் என அனைவரும் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img