Saturday, May 4, 2024

அதிரையில் ரயில் நிற்கும்! அதிகாரிகள் உத்திரவாதம்! மறியல் போராட்டம் ஒத்திவைப்பு!

Share post:

Date:

- Advertisement -

தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு ரயில் அதிரையில் நிற்காது என்ற ரயில்வே இலாக்காவின் முடிவு அதிரை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ரயில் மறியல் போரட்டத்தை அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை அறிவித்து இருந்தது.

இந்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து நல்வாழ்வு பேரவை நிர்வாகிகளை தனித்தனியாக போன் செய்து போராட்ட அறிவிப்பு குறித்தும் ரயில்வே அதிகாரிகள் மேல் மட்டத்தில் அதிராம்பட்டினம் நிறுத்தம் தொடர்பாக தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், அதிரையில் விரைவாக ரயில் நிறுத்தம் செய்ய போதுமான நடவடிக்கைகளை திருச்சி கோட்ட மேலாளர் எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் நம்பகத்தன்மையான உறுதி மொழியை ஏற்று இந்த ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவையினர் தெரிவிக்கின்றனர்.

அதன்படி அதிகாரிகள் மெத்தனப்போக்காக நமது நிறுத்ததை புறக்கணித்தால் ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி வழுவான போரட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என எச்சரித்தனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...